கோவை: கோவை காந்திபுரம் அருகே பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி புகைப்படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி த.பெ.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி அண்ணா சிலை பகுதியில் ஆளுநரைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.